திருமிகு அன்ரன் சின்னராசா பிலிப்

தமிழின மற்றும் ஆன்மீக செயற்பாட்டாளர் அன்ரன் சின்னராசா பிலிப்

அவர்களின் மரண அறிவித்தல்

தமிழீழம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் நோர்வேயில் வாழ்ந்தவரும்,
கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தமிழ் கத்தோலிக்க பங்கின் மதியுரைஞரும்,
கனகத்தூதன் ஏட்டின் ஆசிரியரும், தமிழீழ சங்கத்தில் புதிய குடிவரவாளருக்கான
பன்முகப்பட்ட பணியாளரும் , தமிழின மனித உரிமைக்காக நீண்ட காலம்
பயணித்தவருமான திருமிகு. அன்ரன் சின்னராசா பிலிப் அவர்கள் Feb மாதம் 26ம் திகதி,
ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – பிலிப் பாக்கியம் தம்பதியரின்
அன்பு மகனும், காலம் சென்ற ஞானமணி அன்ரனி – சிசிலியா ஆகியோரின் மருமகனும்,
தேவியின் ஆருயிர் கணவரும், எட்வேட் மணிமாறன், பற்றீசியா வீணா ஆகியோரின்
பாசமிகு தந்தையும், டெவினாவின் மாமனாரும், எட்வேட் இனது பேரனும்,
ஆன் ராசாத்தி (பிரான்ஸ்), மணி (தமிழீழம்), லில்லி (பிரான்ஸ்), பெஞ்சமின் ராஜா
(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல், Mar மாதம் 02ம் திகதி, வியாழக்கிழமை மற்றும் Mar மாதம் 03ம்
திகதி, வெள்ளிக்கிழமை இரண்டு நாட்களும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
இல. 8911 Woodbine Avenue, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல்
பார்வைக்காக வைக்கப்பட்டு Mar மாதம் 04ம் திகதி சனிக்கிழமை காலை 131 Birchmount
Road Scarborough இல் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை தமிழ் பங்கு ஆலயத்தில்
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, இல. 7770 Steeles Avenue East, Markham இல்
அமைந்துள்ள Christ the King Catholic சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
பெஞ்சமின் பிலிப் – 47 990 00 647
ஞானம் அன்ரனி – 416 471 8019

Share Button