July 20, 2021 9:45 am

Ind vs Sl 2nd odi: சஹல் சரவெடி

இந்தியா, இலங்கை இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி துங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அவிஷ்கா பெர்ணான்டோ, பனுகா ஆகியோர் களமிறங்கினர். இந்த பார்ட்னர்ஷிப் துவக்கம் முதலே நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தது. 10 ஓவர்கள் வரை விக்கெட்கள் எதுவும் விழவில்லை. 12 ஓவர்கள் முடிவுரை இலங்கை 75/0 ரன்கள் அடித்து ஓரளவுக்கு வலுவாக இருந்தது.

சாஹல் திருப்புமுனை:

இதனால் இந்திய அணிக்குச் சிறிதளவு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், 13ஆவது ஓவரைவீச சாஹல் வந்தார். இவர் பந்தை சிறப்பாகச் சுழற்றி பனுகா 36 (42), ராஜபக்சா 0 (1) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி, இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இதனால், தொடர்ந்து ஓவருக்கு 5 ரன்கள் அடித்து வந்த இலங்கை அணி, அடுத்து மிகவும் நிதானமாக விளையாட துவங்கியது.

இதனை சாதமாகப் பயன்படுத்தி இந்திய பௌலர்கள், இலங்கை பௌலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்குப் பந்துவீசினர். இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட ஓபனர் பெர்ணான்டோ 50 (71) பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து தனஞ்ஜயா டி சில்வா 32 (45) ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். கேப்டன் ஷனகா 16 (24), ஹசரங்கா 8 (11) போன்றவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அசங்கா மட்டும் சிறப்பாக விளையாடி 68 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார்.

டெத் ஓவர்களில்:

கடந்த போட்டியைப் போலவே, இப்போட்டியிலும் கடைசி நேரத்தில் கருணரத்னே அபாரமாக விளையாடினார். சிக்ஸர் எதுவும் அடிக்கவில்லை என்றாலும்கூட அடிக்கடி ரன்களை சேர்த்து அசத்தினார். இவர் இறுதிவரை களத்தில் இருந்து 33 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்ததால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 275/9 ரன்கள் சேர்த்தது.

புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

கடந்த போட்டியில் 262 ரன்கள் இலக்கை இந்திய அணி 36.4 ஓவர்களில் துரத்தி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button