வங்கிக் கணக்கில் பெருந்தொகை பணத்துடன் சாவகச்சேரி நபர் கைது!

அமெரிக்க வங்கி கணக்குகளை ஹக் செய்து, பணம் மோசடியாக மாற்றப்பட்ட விவகாரத்தில் சாவகாச்சேரியை சேர்ந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான சந்தேக நபரை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைதானவரின் தனியார் வங்கிக் கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கூட்டாளிகளின் உதவியுடன் நிதியைப் பெற்றதாக காவல்துறை தெரிவித்தனர். கூட்டாளிகள் அமெரிக்க வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து யாழ்ப்பாணத்தின் சாவகாச்சேரியில் உள்ள சந்தேக நபருக்கு பணத்தை மாற்றியுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மோசடியில் பங்குதாரர்களுக்கு ஒரு கமிஷன் வழங்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் முதல் இதேபோன்ற மோசடிகளில் ரூ.140 மில்லியன் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 30 சந்தேக நபர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் வந்ததை அடுத்து, 29 வயதான சந்தேகநபர் வவுனியாவில் கைது செய்யப்பட்டார். விசா இன்டர்நேஷனல் பெற்ற புகார்களைத் தொடர்ந்து ஹக்கிங் சம்பவங்கள் குறித்து சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share Button