யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் வன்முறைக்கு அந்தப் பெண்களின் உறவினர்கள்தான் காரணமென இலங்கைக் காவல்துறை தெரிவித்தது
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் வன்முறைக்கு அந்தப் பெண்களின் உறவினர்கள்தான் காரணமென இலங்கைக் காவல்துறை தெரிவித்தது.
வடக்கில் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பெண்களையும் சிறுவர்களையும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்வதாக அனந்தி சசிதரன் வெளியிட்ட குற்றச்சாட்டை காவல்துறை நிராகரித்தது.
16 வயதிலும் குறைந்த 17 பெண்களும், மேலும் 16 பெண்களும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதிக் காவல்துறை மா அதிபர் றொஷான் டயஸ் கூறினார். இவ்வாண்டில், 23 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தைமார் உட்பட்ட உறவினர்களும், அயலவர்களும்தான் அந்த துஷ்பிரயோகங்களைப் புரிந்தார்களென அவர் குறிப்பிட்டார்.