August 19, 2021 2:36 am

மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட நால்வரும் மீண்டும் விளக்கமறியலில்

ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு – கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றன.

இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அத்துடன், அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு குறித்த உத்தரவினை தெரியப்படுத்துமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களின் இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கணினிகளையும் பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share Button