May 7, 2022 1:22 am

மீண்டும் டோனியை தலைவராக நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஜடேஜா கேப்டன்பதவியை ஏற்றது முதலாக அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜடேஜாவாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தோனியே கேப்டன் பதவியை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து “அவர் தனக்கு கேப்டன்சி ஒத்துவராது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் அடுத்த ஆண்டோ அல்லது தோனியின் ஓய்வுக்குப் பின்னோ சென்னை அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்னர் ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Share Button