June 18, 2021 3:51 am

மிருககாட்சிலையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று.!

தெஹிவல மிருககாட்சிலையில் சிங்கம் ஒன்று கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிங்கத்திற்கு கொவிட் தொற்று இதுவரையில் சரியான முறையில் உறுதி செய்யப்பட்டவில்லை எனவும் இருப்பினும் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெஹிவல மிருக காட்சிலையில் சிங்கம் ஒன்று கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அத்துடன் மேலும் இரு மிருகங்கள் திடீரென உயிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share Button