June 21, 2021 1:51 am

மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டளவு பேருந்துகள் சேவையில்.!

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வாரம் முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வழமைபோன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

மாகாணங்களுக்குள் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Share Button