March 20, 2014 1:12 pm

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்க மறியலில்

இலங்கைக் கடற்படையினரால் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 53 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எஸ். லெனின்குமார் இன்று உத்தரவிட்டார். நேற்றுக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று காலை யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இதனையடுத்து நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால், இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிவான் 53 பேரையும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share Button