July 16, 2021 2:03 am

நாட்டில் இதுவரை 5,161,127 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 280,011 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது அளவு நேற்று 27,117 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 157,368 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது அளவு போடப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றைய தினம் 7,993 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 39.176 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது அளவு போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button