நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்குரிய தினம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. இதுதவிர, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.