தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 278 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 97 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 6 ஆயிரத்து 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 53 ஆயிரத்து 282 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.