June 3, 2021 7:53 am

தமிழகத்தில் அடுத்த கட்ட ஊடரங்கு?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டிய நிலையில் மே 24ஆம் தேதி முதல் தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் பாதிப்பு குறைந்த நிலையில் கோவையில் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாக அங்கேயும் குறைந்து வருகிறது.

இரு வார தீவிர ஊரடங்கில் காய்கறி, மளிகை கடைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு நிலவரம், கொரோனா பாதிப்பு நிலவரம் ஆகியவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஊரடங்கை நீட்டித்து செல்ல முடியாது, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினே வீடியோ மூலம் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஜூன் 7 காலை முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. அதாவது ஊரடங்கை நீட்டிப்பது என்றும் முக்கிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அதாவது காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்கிறார்கள். ஏனெனில் பாதிப்பு குறைந்து வந்தாலும் 26 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு பதிவாகிறது.

அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து சேவை உடனடியாக தொடங்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆட்டோ, டாக்சி கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் விவரம்

தனியார், அரசு நிறுவனங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்ககூடும் என்கிறார்கள். அதே சமயம் இ பதிவு முறை தொடர்ந்து அமலில் இருக்கும். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது.

Share Button