May 23, 2019 9:47 pm

ஞானசார தேரரை விடுவித்த அரசாங்கம் ஆனந்த சுதாகரன் விடயத்தில் கருணை காட்டவில்லை – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருணையும் காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் பாகுபாடாக நடந்துகொள்வது நியாயமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசியவாதிகள் யார் என்பதெல்லாம் தெரிந்தும் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைப்பதும் மக்களை கஷ்டப்படுத்துவதும் நியாயமானதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


Share Button