July 15, 2021 9:26 am

சென்னையை சேர்ந்த பெண் தண்ணீர் குடிக்கும் போது செயற்கை பல்லை தெரியாமல் விழுங்கியதால் மரணமடைந்துள்ளார்.!

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ராஜலெட்சுமி 43 வயதாகும் இவர் கடந்த சில நாட்களுக்க முன்பு பல் வலி காரணமாக மருத்துமவமனைக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இவருக்கு பல்லை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு பதிலாக செயற்கையாக பல்லை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜலெட்சுமி அதையும் செய்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை ராஜலெட்சுமி

தண்ணீர் குடிக்கும் போது அவர் பொருத்தியருந்த 3 பல்களும் தெரியமல் கழன்று அவரது வாய்க்குள் சென்று விட்டது. இதனால் பதறியடித்த ராஜலெட்சுமி உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் பல்லை விழுங்கியதாக சொன்னதும் டாக்டர்கள் இவரது உண

வு மண்டல பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது வயிற்றிற்குள் பல் இல்லை இருப்பது தெரியவில்லை. இதனால் டாக்டர்கள் இவரை வீட்டிற்கு அனுப்பினர்.

இந்நிலையில் மறுநாள் வீட்டில் ராஜலெட்சுமி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது வைரலாக பரவி வருகிறது பல்செட்டை விழுங்கிய பெண் பரிதாபமான உயிரிழந்ததை பலர் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Share Button