சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்பு.!
பிரதி மன்றாடியார் நாயகமாக செயற்பட்டு வந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதியுடன் தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்ற பேரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, இவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டது.