கொவிட்-19 பொது சுகாதார உத்தரவுகளை மீறியதாக கண்டறியப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஃபோர்ட் வீதியின் 1000 தொகுதிகளில் பல அலகு கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே விருந்தொன்றுக்காக ஒன்று கூடியிருந்தவர்களுக்கே, கொவிட்-19 தொடர்புடைய நடவடிக்கைகள் சட்டத்தை (சி.ஆர்.எம்.ஏ) மீறியதற்காக அவர்களுக்கு 2,300 டொலர்கள் அபராதம் விதித்ததாக விக்டோரியா காவல்துறை கூறினர்.
மொத்தம் 40 முதல் 60 பேர் வரையுள்ளவர்கள் கூடியிருந்தனர். அவர்களில் பலர் இளைஞர்கள். இவர்கள் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மாகாண சுகாதார அதிகாரிகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் உத்தரவை மீறியதற்காக அதிகாரிகள் அந்த பிரிவில் வசிப்பவருக்கு 2,300 டொலர்கள் அபராதம் விதித்தனர்.
அபராத அறிவிப்பில் சி.ஆர்.எம்.ஏ இன் கீழ் அனுமதிக்கப்பட்ட 2,000 டொலர்கள் அபராதத்திற்கு கூடுதலாக 300 டொலர்கள் பாதிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் அடங்கும் என்றும் காவல்துறை தெரிவித்தனர்.