March 1, 2022 1:42 am

உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை; அதிலுள்ள சிக்கல்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைனுக்கு இந்தியா நிவாரணப் பொருட்கள் அனுப்ப உள்ள நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான முறையில் மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்குவது பற்றியும் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது

Share Button