March 11, 2022 1:38 am

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில், பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் பார்வையிட 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளைய தினம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில், பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக மொஹாலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை நேரில் பார்வையிட, 50 சதவீத ரசிகர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியைப் பார்வையிட, கர்நாடக மாநில கிரிக்கட் சபை, 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பெங்களுர் சின்னசாமி மைதானமானது, 40 ஆயிரம் பார்வையாளர்களுக்கான ஆசனக் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டிக்காக, கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம், சுமார் 10 ஆயிரம் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சபை பொருளாளர் வினய் மிரித்யுன்ஜயா தெரிவித்துள்ளார்.

Share Button