இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 1,878 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மே 9 ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 1,878 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 831 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை மா அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 854 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நேற்றும் (25) 70 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களுள் 41 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.