இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளிற்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன
இலங்கைக்கு 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வந்தடைந்த பீட்டர் புரூவர் மசகிரோ நொசாகி தலைமையிலான சர்வதேச நாணயநிதியத்தின் குழுவினர் 31 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்காலத்தில் இலங்கைக்கான நிதி உதவி தொடர்பிலான விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.