June 3, 2021 3:41 am

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் 594 வைத்தியர்கள் உயிரிழப்பு.!

கொரோனா 2 ஆவது அலையில் நாட்டில் இதுவரை 594 வைத்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஎம்ஏ அளித்துள்ள தகவல்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக தில்லியில் 107 வைத்தியர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து பிகாரில் 96 பேர், உத்தர பிரதேசத்தில் 67 பேர், ராஜஸ்தானில் 43 பேர், ஜார்க்கண்டில் 39 பேர், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தலா 32 பேர் பலியாகிவிட்டனர்.

கொரோனா முதல் அலையில் நாட்டில் மொத்தம் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில், 2 ஆவது அலையில் குறுகிய காலத்திலேயே 594 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

Share Button