April 11, 2022 2:32 am

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 20 போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.!

மும்பை வன்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தநிலையில், 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ரோயல் அணி சார்பில் பந்துவீச்சில் 41 ஓட்டங்கள் வழங்கி 4 விக்கட்டுக்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

Share Button