July 16, 2022 9:22 am

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது

இரவு நேரத்திலும் வெப்பம் அதிகம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக நகர்ப்புறங்களில் வெப்ப நிலை உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்சபட்ச வெப்ப நிலை நிலவுக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share Button