April 22, 2022 2:32 am

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு மஸார் ஷரீப் என்ற இடத்தில் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். இதேபோல், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததில் 40 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன், தலைநகர் காபூலில் பள்ளிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

Share Button