August 20, 2020 9:54 am

அமெரிக்காவில் இருந்து 100 செயற்கை சுவாச கருவிகள் இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன

அமெரிக்காவில் இருந்து 100 செயற்கை சுவாச கருவிகள் இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இந்திய – சீன எல்லைப்பிரச்சினை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்தே 100 செயற்கை சுவாச கருவிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதன்படி நேற்று 100 கருவிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button