November 26, 2017 9:10 pm

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வமத அமைப்பு சந்தித்தது

கிளிநொச்சி கந்தசாமி கோவில் தொடர் கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவ்ர்களின் உறவுகளை இலங்கை சர்வமதப் பேரவையின் குழுவினர் இன்று காலை சந்தித்துள்ளனர்.

சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினது பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டு தெரிந்து கொண்டதுடன் இப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமது பூரண ஆதரவு எப்பொழுதும் இருக்கும் எனத் தெரிவித்தனர். இச் சந்திப்பில் இலங்கை சர்வமதப் பேரவையின்  இணைப்பாளர்கள் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share Button