June 19, 2021 4:38 am

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா். இதை அடுத்து, அவா் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பாா்.

இதுகுறித்து 75 ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் வோல்கான் போஸ்கிா் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடங்கி, 2026 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து, ஐ.நா பொதுச் சபை அரங்கில் குட்டெரெஸுக்கு போஸ்கிா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

Share Button