திரு. இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ணராமேஸ்வரன்)

அளவெட்டி சிறுவிளானை (கிராயட்டியைப்) பிறப்பிடமாகவும் நயினாதீவு யாழ்ப்பாணம் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஈழத்து இசைவாரிதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலைவித்தகர் – வர்ணராமேஸ்வரன் என அழைக்கப்படும் திரு. இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (நிறுவனர் -வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம்கிரியேஷன்) அவர்கள் செப்டம்பர் மாதம் 25ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற சங்கீதபூஷணம் வர்ணகுலசிங்கம் மற்றும் மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வனும், நயினாதீவு சதானந்தன் – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
மதி என அழைக்கப்படும் சபர்மதியின் கணவரும்
குமரன் என அழைக்கப்படும் இளங்குமரன் , காயத்ரி ஆகியோரது தந்தையும்,
ஜெயேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கலைஞானசிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரது சகோதரனும், கயிலாயநாதன், ஜீவகுமாரி, காலஞ்சென்ற சுசீலா ஆகியோரது மைத்துனரும்,
அளவெட்டி Dr. சர்வேஸ்வரன் அவர்களது மருமகனும்,
நந்தவருணி, சித்ரா, சுதாமதி, சிந்துபைரவி ஆகியோரது அத்தானும்,
சுதாகரன், ரமேஸ், கஜரூபன், சிந்துஜன் ஆகியோரது சகலனுமாவார்.
தயாளினி, சிவகரன், ரிஷிகரன், ஜெயகரன், தனுகரன் ஆகியோரது மாமாவும்,
ரதிப்பிரியா, திருமகள், யோகேஸ்வரா, காலஞ்சென்ற ஜெயதேவா, சுந்தரேஸ்வரி, நவினா, ஆகியோரது சித்தப்பாவும், வித்யா, சேதுஷ் ஆகியோரது பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அக்டோபர் மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரையும் மறுநாள் அக்டோபர் மாதம் 11ம் திகதி திங்கடகிழமை காலை 8 மணிமுதல் 8:30 மணிவரையும் இல 8911 Woodbine Ave, Markhamம் தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் அதே இடத்தில் 10 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 10:30 இல் இருந்து 11 மணிவரை இல

12492 Woodbine Ave., Gormley இல் அமைத்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.
தொடர்புகளுக்கு 416 269 8443 / 647 297 2381

Share Button