September 26, 2022 2:34 am

வெளிநாடுகளுக்கு அதிகமான இலங்கையர்கள் செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக கருஜயசூரிய கூறியுள்ளார்

இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக கல்விக்கான அவசியமான வளங்கள் இலங்கையில் இல்லாததன் காரணமாக மக்கள் தமது சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button