May 28, 2022 1:52 am

வட்டுக்கோட்டை காவல் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் காவல்துறை குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளாததால் கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share Button