April 28, 2022 1:44 am

ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசம் வேண்டி ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று (ஏப். 28) சந்திக்க தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு மேல் தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யா- உக்ரைன் இடையே சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் ரஷ்யா சென்று, அதிபர் விளாடிமிர் புடினையும், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று (ஏப். 28-ம் தேதி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தும் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button