April 28, 2022 1:48 am

நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மலேசியாவில் 15 கிராமுக்கு கூடுதலாக போதைப்பொருள் எடுத்து சென்றால், அந்நாட்டு சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.  அதன்படி, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் கடந்த 2011ம் ஆண்டு முதல் மேல்முறையீடு செய்த போதிலும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி அதிபருக்கு அவர் அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தர்மலிங்கத்தின் தாய் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து நாகேந்திரனின் சகோதரர் நவீன் குமார் கூறுகையில், `மலேசியாவில் இபோ நகரில் நகேந்திரன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்,’ என்று தெரிவித்தார்.“தர்மலிங்கம் என்ன செய்கிறோம் என்பது தெரிந்தே போதைப்பொருள் கடத்தினார்,’ என்று சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Share Button