July 10, 2021 9:52 am

தாய்ப்பால் கொடுக்கும் போது மாத்திரை சாப்பிடலாமா?

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் இளந்தாய்மார்கள் சில ஆரோக்கிய குறைபாடுகளை எதிர்கொள்வார்கள். இது கர்ப்பகாலம், பிரசவக்காலம் போல் இல்லாவிட்டாலும் இந்த குறைபாடு சாதாரணமானது.

நோய்களுக்கும் மருத்துவ நிலைமைகளுக்கும் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) ஆன்டி பயாடிக் பயன்பாடு தேவையில்லை என்றாலும் சிலர் காது, சைனஸ் தொற்று, பற்கள் மற்றும் ஈறுகளில் முலையழற்சி போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது ஆன்டி பயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரைத்தால் நீங்கள் அதன் பாதுகாப்பு குறித்து சில சந்தேகங்களை கொண்டிருக்கலாம். இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா, மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லுமா போன்ற உங்களது சந்தேகங்களுக்கு இதில் தீர்வு கிடைக்கலாம்.

பெரும்பாலான நேரங்களில் தாய்ப்பால் கொடுக்கும் பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இந்த ஆன்டி பயாடிக் பாதுகாப்பானவை. இது தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஓரளவுக்கு பாலில் செல்லப்படுகிறது என்று அகாடமி ஆஃப் அமெரிக்கன் பீடியாட்ரிக்ஸ் சொல்கிறது.

பொதுவாக ஆன் டி பயாடிக் முன்கூட்டிய குழந்தை அல்லது பிறந்த குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்காத சூழலில் தாய் மருந்துகளை எடுத்துகொள்வது பாதுகாப்பானது. தாய்ப்பால் கொடுக்கும் போது மருந்துகள் உடலில் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

இரத்த ஓட்டத்தில் இருக்கும் பெரும்பாலான மருந்துகள் தாய்ப்பாலிலும் இருக்கும். எனினும் உங்கள் பாலில் உள்ள மருந்தின் அளவு இரத்தத்தில் இருப்பதை காட்டிலும் குறைவாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் தாய்மார்கள் எடுத்துகொள்ளும் மருந்துகளை குழந்தை மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும்.

மருந்துகள் குழந்தையின் வயது பொறுத்தும் நினைவில் கொள்ள வேண்டும். ஆன் டி பயாடிக் மருந்துகளின் வெளிப்பாடு முன்கூட்டிய குழந்தைகள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.குழந்தைக்கு பாதுகாப்பாக கருதக்கூடிய ஆன்டி பயாடிக் எடுத்துகொள்வது பாதுகாப்பானது . அல்லது பாதுகாப்பான மாற்று வழி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக சொல்லிவிட முடியாது. குழந்தையின் வயது, எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பொறுத்து இந்த கேள்விக்கு பதிலளிப்பதே சரியானதாக இருக்கும். மருந்துகள் பரிந்துரைக்கும் மருத்துவர் மற்றும் குழந்தை நல மருத்துவர் இருவரின் ஆலோசனையும் அவசியம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பாதுகாப்பானவையாக சொல்லப்படும் சில மருந்துகள் உள்ளது. பென்சிலின்கள், அமோக்ஸிசிலின் மற்றும் ஆம்பிசிலின் உள்ளிட்டவை செஃபாலெக்ஸின் போன்ற செபலோஸ்ஃபோரின் ஃப்ளூகோனசோல் இது ஆன் டி பயாடிக் அல்ல. ஆனால் பூஞ்சை தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் பொதுவான ஆன் டி மைக்ரோபியல். இந்த மருந்துகள் அல்லாமல் நீங்கள் வேறு ஆன்டி பயாடிக் எடுத்துகொண்டால் குழந்தை மருத்துவரிடமும் உங்கள் மருத்துவரிடமும் பேசுவது நல்லது.

ஆன் டி பயாடிக் மருந்துகள் எடுத்துகொள்ளும் அம்மாக்களது உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்வதன் மூலம் இது செயல்படுகின்றன. இது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கும். இதனால் தாய் மற்றும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருவருக்குமே சில அசெளகரியங்களை உண்டாக்கலாம்.

குழந்தைக்கு வயிறு வலி

சில நேரங்கள் அம்மாக்கள் தாங்கள் ஆன் டி பயாடிக் மருந்துகளை எடுத்து கொண்ட பிறகு குழந்தைக்கு வயிற்று வலி இருப்பதாக சொல்கிறார்கள். ஏனெனில் ஆன் டி பயாடிக் மருந்துகள் குழந்தையின் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாவை குறைப்பதால் இந்நிலை உண்டாகலாம்.

இது நீண்ட கால்ம் தீங்கு விளைவிக்காது. குடல் ஆரோக்கியத்துக்கு தாய்ப்பால் சிறந்தது என்பதால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றான இணை உணவை நீங்கள் உறுதி செய்தால் புரோபயாட்டிக் பரிந்துரைக்கலாம். இது குறித்து மருத்துவருடன் ஆலோசியுங்கள்.

த்ரஷ் சில நேரங்களில் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் உடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அது மற்ற நுண்ணுயிரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் கேண்டிடா அல்பிகான்ஸால் எனப்படும் பூஞ்சை தொற்று உருவாகலாம்.

கேண்டிடா அல்பிகான்களின் வளர்ச்சி அம்மாவுக்கும் குழந்தைக்கும் இருவருக்குமே சங்கடமான அறிகுறிகளை உண்டாக்கும். குழந்தைகளுக்கு வயிறு, டயபர் சொறி, வாயில் நாக்கில் வெள்ளை பூச்சு உண்டாக்கலாம். தாய்க்கு முலைக்காம்பு வலி சிவப்பு, வலியோடு இருக்கலாம். இவர்கள் இருவருக்கும் பூஞ்சை காளான் மருந்து அடங்கும். ஆனால் இதை தடுக்க ஆன் டி பயாடின் உடன் குடல் பாக்டீரியாவை சீராக வைக்க புரோபயாட்டிக் அவசியம்.

நீங்கள் ஆன் டி பயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடுத்துகொள்வதாக இருந்தால் குழந்தை மருத்துவரிடம் சில விஷயங்கள் குறித்து நீங்கள் விவாதிக்கலாம்.

குழந்தைக்கு நான் இந்த மருந்து எடுத்துகொள்வது பாதுகாப்பானதா, இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டாகுமா. குழந்தைக்கு புரோபயாடிக் இணையாக கொடுக்க வேண்டுமா? ஆன்டி பயாடிக் குழந்தைக்கு பாதுகாப்பானது அல்ல என்று சொன்னால் நீங்கள் பயப்பட வேண்டாம்.

மாற்று தாய்ப்பாலுக்கு நட்பு செய்யும் ஆன் டி பயாடிக் உண்டா என்பதை கேளுங்கள். அல்லது குறைந்த அளவு மருந்து, எவ்வளவு நேரம் எடுத்துகொல்ள வேண்டும். அது உடலில் எவ்வளவு நேரம் வரை இருக்கும் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

குழந்தைக்கு பாதுகாப்பற்ற மருந்தை நீங்கள் எடுக்க வேண்டியதாக இருந்தால் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு முரணான ஆன் டி பயாடிக் எடுக்க வேண்டி இருக்கலாம்.

அப்போது பால் விநியோகத்தை தடைபடாமல் செய்ய தாய்ப்பாலை பம்ப் செய்து வைத்து குழந்தையின் பசியாறுதலுக்கு கொடுக்கலாம். அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது சிறிதளவு வெளியேற்றிய பிறகு நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். சில மணி நேரங்களில் உடலில் ஆன் டி பயாடிக் மருந்துகளின் செயல்பாடு முடிவடைந்ததும் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்.

Share Button