July 19, 2021 10:21 am

சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டபின் நினைவில் கொள்ள வேண்டி விஷயங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா ஆபத்து அதிகம் என்பதை நாம் முன்பே அறிந்திருப்போம். கோவிட் -19 நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்தும். அதாவது, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் போதுமான குளுக்கோஸ் அளவு பராமரிக்கப்படாவிட்டால், அவர்கள் கொரோனா வைரஸால் கடுமையான சிக்கல்களை அனுபவிப்பர். இது அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரைவில் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்பட்டனர்.

பொதுவாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, ஆரோக்கியமான, சத்தான உணவை உட்கொள்ளவும், பதினைந்து நாட்களுக்கு மதுபானங்கள் அருந்துவதை தவிர்க்கவும், இரண்டு நாட்களுக்கு எந்தவொரு கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஆரோக்கியமான, சத்தான உணவை உட்கொள்ளுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒரு நாளுக்கு முன் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பதினைந்து நாட்களுக்கு மதுபானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சில நாட்களுக்கு எந்தவொரு கடுமையான வேலை மற்றும் உடல் சம்மந்தப்பட்ட உடற்பயிற்சியையோ செய்யக்கூடாது.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது தங்களின் இரத்த குளுக்கோஸ் அளவை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், தடுப்பூசிக்குப் பிறகு நீரிழிவு நோயாளிகளில் பலருக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளது.

இதனை தவிர்க்க நீங்கள் அடிக்கடி சர்க்கரை அளவை கண்காணித்தல் நல்லது. அடிக்கடி சர்க்கரை அளவில் அதிரடி மாற்றம் இருந்ததால் உங்கள் மருத்துவரை சந்தித்துப் பேச வேண்டும்.

அதேபோல் தடுப்பூசி போடுவதற்கு முன், நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது தடுப்பூசியின் செயல்திறனைத் தடுக்கக்கூடும் என்ற தவறான தகவலை நம்பி மருந்துகளை நிறுத்தக்கூடாது.

தடுப்பூசிக்குப் பிறகு பொதுவாகவே சிலர் சில பக்க விளைவுகளை அனுபவிக்கின்றனர். அதில் குறிப்பாக, அதிக காய்ச்சல், ஊசி போடும் இடம் சிவந்து போதல், வலி அல்லது வீக்கம், உடல் வலி, சோர்வு அல்லது லேசான சொறி போன்றவை ஏற்படலாம். இது தடுப்பூசிக்கான பொதுவான விளைவு தான். இது 2 நாட்களில் சரியாகி விடும், அதனால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும் தடுப்பூசிக்குப் பின் ஏதேனும் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

அனைத்தையும் விட கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையே சிறந்த மருந்தாகும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொள்வது, வெளியில் சென்று விட்டு வந்தால் கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை செய்தாலே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும்.

Share Button