June 3, 2021 8:15 am

சருமத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டா அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் உலகளவில் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டே இந்தியா தான் நீரிழிவு நோய் பாதிப்பில் முதல் இடத்தில் இருந்தது. இது கவலைக்குரிய விஷயம் ஆகும்.

இன்சுலின் என்ற ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு கிராமங்களில் 5-ல் இருந்து 7 சதவீத மக்களும், நகரங்களில் 15-ல் இருந்து 20 சதவீத மக்களும் ஆளாகின்றனர்.

மற்ற நோய் வருவதற்கு முன்னர் ஏற்படும் அறிகுறிகளைப் போன்றே சர்க்கரை நோய் வருவதற்கு முன்னே வரும் அறிகுறிகள் பல உள்ளன. ஆனால், நாம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அதனாலே நாம் சர்க்கரை நோய் வந்த பின்பே அதனைப் பற்றி தெரிந்து கவலை கொள்கிறோம். சரி வாங்க அந்த அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நமக்கு ஏற்படும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலருக்கு இது போன்ற தோல் பிரச்சனைக்குப் பின்னர் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்றைய சூழ்நிலையில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் 30 சதவீதம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோய் உருவாக உள்ளது என்பதற்கான அறிகுறியை உணர்த்தும் முதல் உறுப்பு தோல் தான்.

முதலில் உங்களின் தோலில் முகப்பரு போன்று தோற்றமளிக்கும் கட்டிகள் உருவாகும். இது பின்னர் வீக்கமடைந்து திட்டுகளாக மாறும். அதுமட்டுமின்றி அந்த கட்டிகள் வலியை ஏற்படுத்துவதோடு, அரிப்பினையும் உண்டாக்கும். இது போன்ற கட்டிகள் உருவாவதை நெக்ரோபோயிஸ் லிபோய்டிகா என்று அழைக்கலாம். இது போன்ற கட்டிகள் உங்களின் கழுத்துப் பகுதி, அக்குள் பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் அதிகமாக ஏற்படும். இது உங்களின் இரத்தத்தில் இன்சுலின் அளவில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டும் அறிகுறியாகும்.

தோல் பகுதியில் நீர் போன்ற திரவத்தால் நிறைந்த கொப்புளங்கள் ஏற்படும். இது ஒரு குழுவாகவோ அல்லது பெரிய பெரிய கொப்புளங்கலாகவோ இருக்கலாம். இவை அதிகமாக உங்கள் கால்களில் தான் தோன்றும். இது புல்லோசிஸ் நீரிழிவு நோய் அல்லது டிபெக்டி புல்லே என்று அழைக்கப்படுகிறது. அதேவேளையில் இந்த கொப்புளங்கள் வலி மிகுந்ததாக இருக்காது. இது தான் சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும். இப்படி ஏற்படும் கொப்புளங்கள் புண்களாக மாறும் வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு அதிக கொழுப்பு இருந்தால் அது கூட உங்களின் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை ஏற்படுத்தும். அதிக அளவு கொழுப்பு உங்களுக்கு இருந்தால் உங்களின் கண்களைச் சுற்றி மஞ்சள் நிற திட்டுகள் ஏற்படும். இது கூட நீரிழிவு நோயின் அறிகுறி தான்.

Share Button